23 Aug 2010

வட்டார வைத்தியர் -மறைந்த டாக்டர் காசிராஜன்

கீழக்கரை மக்களுக்கும் வைத்தியத்துக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத விஷயம் என யாவரும் அறிந்ததே.

" உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து பலம் மட்டுமே. எப்போதெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுகிறாமோ, அப்போதெல்லாம் மனபலம் நமக்கு அதிகம் தேவைப்படும். என விவேகானந்தரின் கூற்றை அறிந்தோ, அறியாமலோ கீழக்கரை மக்கள் பொருந்தி கொன்டார்கள். மலேரியா, டபுள் மலேரியா!, சிக்கன் குனியா, என உள்ளூரில் வசிக்கும் மக்களை மட்டுமின்றி, துபாயில் இருந்து லீவுக்கு ஊருக்கு போகும் சபராளிகளையும் ஒரு கை பார்க்காமல் ஓய்வதில்லை. நகராட்சியும், வெல்பேர் சங்கமும், உள்ளூர் வைத்த்தியர்களும் போராடி, போராடி அலுத்து போய், இந்த கொடிய நோய்கள் ரெம்ப சாதாரணமான விஷயாமாகி விட்டது.

1940 களில் இருந்து 1980கள் வரை, காலராவும், பெரியமமை நோயும் மாறி மாறி வந்து நூற்றுக்கணக்கான மக்களை காவு கொண்டது, எனது பள்ளி பருவத்தில் காலராவுக்கு ஊசி போட மருத்துவர்களும், நர்ஸ்களும் பள்ளிக்கு வரும் பொழுது பள்ளியே பயந்து ஒடுங்கும், ஊசி போட்ட பின் இரவில் சுடு தன்னிவைத்து ஒத்து கொடுத்தால்தான் வலி தீரும்.

இது போன்ற வலிகளே காலரா நோய்க்கு எமனாகி காலராவை இல்லாமல் ஆக்கியது. அப்படியும் யாராவதும் ஒரு குழந்தை காலாராவில் பீடிக்கப்பட்டால் இராமனாதபுரம் குழந்தை டாகடர் காசிராஜனை தவிர வேறு யாராலும்காப்பாற்ற முடியாது,  ஆபத்பாந்தாவனான இவர் கொஞம் முன் கோபியானலும் இவரால் உயிர் பிழைத்த மழலைகள் ஏராளம், ஒவ்வொரு முறையும் இராம நாதபுரம் கேனிக்கரை செல்லும் பொழுதும் மறைந்த டாக்டர் காசிராஜன் நினைவுகளில் என் மனம் சில கனங்கள் மூழ்கும்.