4 Aug 2008

கீழக்கரை சமூக பிரமுகர் எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் மறைவு

இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், வள்ளல் சீதக்காதியினால் கட்டுமானம் செய்யப்பட்ட புகழ் மிகுந்த ஜும் ஆ பள்ளி அமைந்திருக்கும் நடுத்தெரு ஜமா அத்தின் முத்தவல்லியாக பத்து ஆண்டுகளாக சேவை செய்தவரும், கீழக்கரை அணைத்து ஜமா அத் கமிட்டியின் உப தலைவராக இருந்து சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவருமான எம்.கே.எஸ். ஷரீப் ஹாஜியார் அவர்கள் 03.08.2008, ஞாயிறு அன்று பிற்பகல் 2 மனி அளவில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மறைந்த ஹாஜியார் அவர்கள் 1930 ஆம் ஆண்டு கீழக்கரையில் பிறந்து, இலங்கை தலை நகர் கொழும்புவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். இவர்களின் நல்லடக்கம் 04.08.2008 இன்று கீழக்கரை ஜும் ஆ பள்ளி மைய வாடியில் நடை பெறுகிறது.

No comments:

Post a Comment