7 Jul 2008

சமூக காவலர் கீழக்கரை எம்.எம்.கே - நினைவுகள்

நடை, உடை, பாவனைகளில் மிடுக்கும்,கம்பீர தோற்றமும்,அதீத அறிவுத்திறனும்,தெளிவான பேச்சுத்திறனும் ஒருங்கே பெற்ற திரு எம்.எம்.கே. முகம்மது இப்ராகீம் அவர்கள் 2008 ஜீன் மாதம் 11ஆம் தேதி காலமானார்கள். தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொன்ட திரு எம்.எம்.கே அவர்கள் ஆரம்ப காலங்களில் இந்திரா காங்கிரஸ் கட்சியிலும், பின்பு புதிய தமிழம் கட்சியில் மா நில பொதுச் செயலாளராகவும், இறுதியில் அ.தி.மு.க விலும் இனைந்து பணி ஆற்றினார் வந்தார்கள். இவரின் இயல்பான தான் கொன்ட கொள்கையின் பிடிப்பு காரானமாக எந்த அரசியல் கட்சியிலும் நிலையாக நீடிக்கமுடியவில்லை. அஞ்சா நெஞ்சானானன இவரின் உறுதியான கருத்துக்களுடன் இவர் சார்ந்த கட்சிகளின் கொளகைகள் ஒத்துப்போகாத தன்மையயே இதற்கு காரனமாக எடுத்துக் கொள்ளலாம்.

1984ல் நடந்த சட்ட சபை தேர்தலில் கடலாடி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டாலும், தான் சார்ந்த சமூகத்தின் போர் படை தளபதியாகவே தனது இறுதி மூச்சு வரை விளங்கினார். கீழக்கரை சார்ந்த பகுதிகளின் சமூக நால்லிணக்கத்திற்காக பெரிதும் பாடுவட்டவர். புற தோற்றத்தில் கரடு முரடாக தெரிந்தாலும், வெள்ளை அகத்தினர். அவர் இறுதிவரை அணிந்து வந்த ஆடை போன்றே. கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா உயர் நிலை, மற்றும்,மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிரவாகியாக பல காலம் பனிபுரிந்து, அந்தா கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலாராக வெற்றிபெற்று சமூக பணி பலவும் ஆற்றிவந்தவர், இன்று நம்மிடம் இல்லை.

வள்ளல்களுக்கும், பெரும் தொழில் வணிகர்களுக்கும், ஆண்மீக குருக்களுக்கும் பெயர் பெற்ற கீழக்கரை சமூகத்தின் காவலனாக திகழ்ந்த திரு எம். எம். கே அவர்களின் மரனத்தால் கீழக்கரை சமூகம் தனது பாதுகாப்பு கேடயத்தினை இழந்து தவிக்கிறது............

No comments:

Post a Comment